என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருமத்தம்பட்டி அருகே பாவு நூல் வாங்கி ரூ.20 லட்சம் மோசடி- 2 பேர் கைது
Byமாலை மலர்8 Jan 2021 11:18 AM GMT (Updated: 8 Jan 2021 11:18 AM GMT)
கோவை கருமத்தம்பட்டி அருகே பாவு நூல் வாங்கி ரூ.20 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கருமத்தம்பட்டி:
கோவை கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் அருகே உள்ள சேடபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 45). இவர் இதே பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி விசைத்தறிகளுக்கு பாவு நூல் கொடுத்து வருகிறார்.
இவரிடம் கோவையை சேர்ந்த தனபால் (38) மற்றும் ராஜேஷ் (42) ஆகிய இருவரும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் கணக்கு வைத்து பாவு நூல் வாங்கி வந்துள்ளனர். இதுதொடர்பாக 20 லட்சம் ரூபாய் கணக்கு இருந்தது.
இந்நிலையில் அவர்கள் தரவேண்டிய பணத்தை டெக்டைல்ஸ் உரிமையாளர் செந்தில்குமார் இருவரையும் தொடர்பு கொண்டு கேட்டபோது பணத்தை கொடுக்க மறுத்ததுடன் தகாத வார்த்தைகளால் பேசியும் மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து ராஜேஷ் மற்றும் தனபால் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
கோவை கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் அருகே உள்ள சேடபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 45). இவர் இதே பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி விசைத்தறிகளுக்கு பாவு நூல் கொடுத்து வருகிறார்.
இவரிடம் கோவையை சேர்ந்த தனபால் (38) மற்றும் ராஜேஷ் (42) ஆகிய இருவரும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் கணக்கு வைத்து பாவு நூல் வாங்கி வந்துள்ளனர். இதுதொடர்பாக 20 லட்சம் ரூபாய் கணக்கு இருந்தது.
இந்நிலையில் அவர்கள் தரவேண்டிய பணத்தை டெக்டைல்ஸ் உரிமையாளர் செந்தில்குமார் இருவரையும் தொடர்பு கொண்டு கேட்டபோது பணத்தை கொடுக்க மறுத்ததுடன் தகாத வார்த்தைகளால் பேசியும் மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து ராஜேஷ் மற்றும் தனபால் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X