search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவாரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை

    திருவாரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. .
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது 47). இவர் கடந்த 2018-ம் ஆண்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தானகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது.

    இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு ஆண்டு சிறைதண்டனையும், ரூ.500 அபாரதமும் விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மல்லிகா ஆஜரானார்.
    Next Story
    ×