search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மானூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு- விவசாயி கைது

    மானூர் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மானூர்:

    நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் பால்ராஜ் (வயது 29). கூலி தொழிலாளி.

    இவருடைய பாட்டி, அதே ஊரைச் சேர்ந்த விவசாயி பொன்னுத்துரைக்கு (50) ரூ.50 ஆயிரத்தை கொடுத்ததாகவும், பின்னர் பொன்னுத்துரை அந்த பணத்தை திருப்பி வழங்காததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று பால்ராஜ் அப்பகுதியில் தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த பொன்னுத்துரை, அவருடைய மகன் செர்ரி, சேதுராயன்புதூரைச் சேர்ந்த மகாராஜன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து பால்ராஜை அரிவாளால் வெட்டி, கொலைமிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த பால்ராஜை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுத்துரையை கைது செய்தனர். தலைமறைவான செர்ரி உள்ளிட்ட மற்ற 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×