search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    துவரங்குறிச்சி அருகே வங்கி அதிகாரி விபத்தில் பலி

    துவரங்குறிச்சி அருகே விபத்தில் தனியார் வங்கி அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். கிராம பெண் உதவியாளர் படுகாயம் அடைந்தார்.
    துவரங்குறிச்சி:

    கரூர் மாவட்டம் கொள்ளுதின்னிபட்டியை சேர்ந்தவர் மரியஸ்டீபன்(வயது 24). இவர் தனியார் வங்கியில் பணசேகரிப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை பணம் வசூல் செய்வதற்காக துவரங்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே செவல்பட்டி மேலூரை சேர்ந்தவர் அனுசுயாதேவி(37). இவர் கஞ்சநாயக்கன்பட்டி வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    இருவரும் சிங்கிலிப்பட்டி அருகே வந்த போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மரியஸ்டீபன் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிராம பெண் உதவியாளர் அனுசுயாதேவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் மரியஸ்டீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×