என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துவரங்குறிச்சி அருகே வங்கி அதிகாரி விபத்தில் பலி
Byமாலை மலர்3 Jan 2021 9:40 AM GMT (Updated: 3 Jan 2021 9:40 AM GMT)
துவரங்குறிச்சி அருகே விபத்தில் தனியார் வங்கி அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். கிராம பெண் உதவியாளர் படுகாயம் அடைந்தார்.
துவரங்குறிச்சி:
கரூர் மாவட்டம் கொள்ளுதின்னிபட்டியை சேர்ந்தவர் மரியஸ்டீபன்(வயது 24). இவர் தனியார் வங்கியில் பணசேகரிப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை பணம் வசூல் செய்வதற்காக துவரங்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே செவல்பட்டி மேலூரை சேர்ந்தவர் அனுசுயாதேவி(37). இவர் கஞ்சநாயக்கன்பட்டி வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
இருவரும் சிங்கிலிப்பட்டி அருகே வந்த போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மரியஸ்டீபன் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிராம பெண் உதவியாளர் அனுசுயாதேவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் மரியஸ்டீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்டம் கொள்ளுதின்னிபட்டியை சேர்ந்தவர் மரியஸ்டீபன்(வயது 24). இவர் தனியார் வங்கியில் பணசேகரிப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை பணம் வசூல் செய்வதற்காக துவரங்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே செவல்பட்டி மேலூரை சேர்ந்தவர் அனுசுயாதேவி(37). இவர் கஞ்சநாயக்கன்பட்டி வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
இருவரும் சிங்கிலிப்பட்டி அருகே வந்த போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மரியஸ்டீபன் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிராம பெண் உதவியாளர் அனுசுயாதேவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் மரியஸ்டீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X