search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாலமேடு பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

    பாலமேடு பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    அலங்காநல்லூர்:

    பாலமேடு பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வ அரசு, தொகுதி செயலாளர் சிந்தனை வளவன், ஒன்றிய செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழுவில் ஆதிதிராவிடர் சமுதாய குழுவினர்களையும் இணைக்க வேண்டியும் தலைமையில் ஜல்லிக்கட்டு விழா குழு அமைத்து நடத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுமார் 30 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×