என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி
Byமாலை மலர்1 Jan 2021 5:41 AM GMT (Updated: 1 Jan 2021 5:41 AM GMT)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அண்ணியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் ஊராட்சிக்குட்பட்ட சிவலியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(வயது23). இவருக்கு வீட்டின் அருகே உள்ள ஒரு பெண்ணுடன் ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விக்னேஷ் நேற்று காலை அவரது மாமனார் வீட்டின் அருகே உள்ள கொட்டகைக்கு சென்றார். அப்போது கொட்டகையின் நுழைவு பகுதியின் பக்கவாட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு கேட்டை தொட்டபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் மனைவி ரோஜா(25) ஓடோடி சென்று விக்னேஷை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் உயிருக்கு போராடினர். இதைப் பார்த்து விக்னேசின் தாய் ராஜகுமாரி(55) ஓடோடி வந்து அவர்களை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் மரக்கடையால் 3 பேரையும் அடித்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விக்னேஷ், ரோஜா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ராஜகுமாரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் ஊராட்சிக்குட்பட்ட சிவலியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(வயது23). இவருக்கு வீட்டின் அருகே உள்ள ஒரு பெண்ணுடன் ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விக்னேஷ் நேற்று காலை அவரது மாமனார் வீட்டின் அருகே உள்ள கொட்டகைக்கு சென்றார். அப்போது கொட்டகையின் நுழைவு பகுதியின் பக்கவாட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு கேட்டை தொட்டபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் மனைவி ரோஜா(25) ஓடோடி சென்று விக்னேஷை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் உயிருக்கு போராடினர். இதைப் பார்த்து விக்னேசின் தாய் ராஜகுமாரி(55) ஓடோடி வந்து அவர்களை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் மரக்கடையால் 3 பேரையும் அடித்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விக்னேஷ், ரோஜா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ராஜகுமாரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X