என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நகைப்பட்டறையில் 2½ கிலோ நகை வாங்கி மோசடி செய்த வியாபாரி கைது
Byமாலை மலர்31 Dec 2020 2:06 AM GMT (Updated: 31 Dec 2020 2:06 AM GMT)
சென்னை நகைப்பட்டறையில் 2½ கிலோ நகை வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்த மதுரையை சேர்ந்த நகை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்:
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சுப்பிரதா ஜனா(வயது 45). சவுகார்பேட்டையில் தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இங்கு 5-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு நகைகள் செய்து வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவது வழக்கம்.
மதுரையை சேர்ந்த தங்க நகை வியாபாரியான அய்யனார் (50) என்பவர் சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறைகளில் தங்க நகைகளை வாங்கிச்சென்று விற்பது பழக்கம். இதனால் அவருக்கு இங்குள்ள நகை பட்டறைகளில் நகை, பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அய்யனார், சுப்பிரதா ஜனாவின் நகைப்பட்டறையில் இருந்து சுமார் 2½ கிலோ தங்க நகைகளை வாங்கிச் சென்றார். ஆனால் அதன்பிறகு அவர், நகைக்கு உண்டான பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். சுப்பிரதா ஜனா போன் செய்தாலும் எடுக்காமல் தவிர்த்து வந்தார்.
இ்ந்த மோசடி குறித்து யானைக்கவுனி போலீசில் சுப்பிரதா ஜனா புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை சென்று நகை வியாபாரி அய்யனாரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில் 2½ கிலோ நகையை வாங்கி மோசடி செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மோசடி செய்த நகையின் மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சுப்பிரதா ஜனா(வயது 45). சவுகார்பேட்டையில் தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இங்கு 5-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு நகைகள் செய்து வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவது வழக்கம்.
மதுரையை சேர்ந்த தங்க நகை வியாபாரியான அய்யனார் (50) என்பவர் சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறைகளில் தங்க நகைகளை வாங்கிச்சென்று விற்பது பழக்கம். இதனால் அவருக்கு இங்குள்ள நகை பட்டறைகளில் நகை, பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அய்யனார், சுப்பிரதா ஜனாவின் நகைப்பட்டறையில் இருந்து சுமார் 2½ கிலோ தங்க நகைகளை வாங்கிச் சென்றார். ஆனால் அதன்பிறகு அவர், நகைக்கு உண்டான பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். சுப்பிரதா ஜனா போன் செய்தாலும் எடுக்காமல் தவிர்த்து வந்தார்.
இ்ந்த மோசடி குறித்து யானைக்கவுனி போலீசில் சுப்பிரதா ஜனா புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை சென்று நகை வியாபாரி அய்யனாரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில் 2½ கிலோ நகையை வாங்கி மோசடி செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மோசடி செய்த நகையின் மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X