search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry fraud"

    • திருமண ஆசை காட்டி கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணிடம் 33 பவுன் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • இந்த சம்பவம் குறித்து அந்த பெண் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியை சேர்ந்தவர் மாலதி (வயது 32). இவர் முதல் கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருக் கும், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த ராம் குமார் என்ற வாலிபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து அவரிடம் இருந்து 33 பவுன் நகைகளை ராம்குமார் வாங்கி உள்ளார். அந்த நகைகளை தனியார் வங்கி யில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். 6 மாதங்கள் கடந்த பின்னரும் ராம்குமார் நகைகளை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாலதி, ராம்குமாரிடம் இதுகுறித்து கேட்டார். அப்போது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாலதி மதுரை ஐகோர்ட்டில் மாலதி மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது ராம்குமார் கோர்ட் டில் ஆஜராகி முன்பணம் கொடுத்து விடுவதாகவும், 6 மாதம் கழித்து நகைகளை திரும்ப கொடுப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால் அவர் கூறியதுபோல் பணம், நகைகளை தரவில்லை. மேலும் வழக்கு வாய்தா வுக்கும் ஆஜராகவில்லை. இதையடுத்து தளவாய் புரம் போலீஸ் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை பல்லாவரம் அருகே அ.தி.மு.க. பிரமுகரிடம் போலி நகையை விற்று ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் நவ ரத்தன்மால் (வயது52). இவர் பல்லாவரம் இந்திராகாந்தி பிரதான சாலையில் நவரத்தன் ஜெயின் என்ற பெயரில் நகைக்கடை மற்றும் அடகுகடை நடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க. பிரமுகரான இவர் காஞ்சீபுரம் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராகவும் உள்ளார். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆகும். கடந்த 10 வருடங்களாக இவர் இங்கு நகைக்கடையையும், அடகு கடையையும் நடத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரது கடைக்கு 4 பேர் வந்தனர். அவர்கள் நவரத்தன் மாலிடம் தங்களது சொந்த ஊரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்தான் என்று கூறினார்கள். உங்கள் உறவினர்களை எங்களுக்கு தெரியும் என்றுகூறி அவரது உறவினர்களின் பெயர்களையும் கூறினார்கள். இதனால் நவரத்தன் மால் அவர்களிடம் நன்றாக பேசினார்.

    அந்த 4 பேரும் தாங்கள் ஜெய்ப்பூரில் மாடுகளை வளர்த்து பால்பண்ணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். சென்னையில் தொழில்தொடங்கப் போவதாகவும் அதற்காக நகையை விற்று பணம் பெற வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். அவரும் நகைகளுக்கு பணம் தர சம்மதித்தார்.

    2½ கிலோ எடைகொண்ட 64 காசு மாலைகளை அவரிடம் கொடுத்து ரூ.40 லட்சம் பணம் கேட்டனர். அந்த காசுமாலைகளை வாங்கி லேசாக உரசிப் பார்த்த போது தங்கம் போலவே இருந்ததால் நவரத்தன்மால் அதற்கு ரூ.40 லட்சம் பணத்தை கொடுத்தார். 4 பேரும் பணத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    நவம்பர் மாதம் புதிய நகைகள் தயாரிக்கலாம் என்று கருதிய நவரத்தன் மால் அந்த காசு மாலைகளை உருக்கினார். அப்போது அது போலி நகை என்று தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நவரத்தன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் கடந்தமாதம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பல்லாவரம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பல்லாவரம் போலீசார் போலி நகை மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
    ×