search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதர்பேட்டையில் குவிந்து கிடக்கும் குப்பை
    X
    காதர்பேட்டையில் குவிந்து கிடக்கும் குப்பை

    காதர்பேட்டையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

    காதர்பேட்டையில் உள்ள வீதிகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. பல நாட்கள் குப்பைகள் அந்த இடத்திலேயே கிடப்பதால், ஒருவித துர்நாற்றமும் வீசி சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூரில் ஆடை விற்பனைக்கு பெயர் பெற்ற காதர்பேட்டைக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் வந்து ஆடைகளை வாங்கி செல்கிறார்கள். இங்கு ஏராளமான சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் எப்போதும் காதர்பேட்டையில் கூட்டம் காணப்படும். குறிப்பாக பண்டிகை காலங்களில் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் காதர்பேட்டையில் குப்பை தொட்டிகள் வசதி இல்லாததால், அந்த பகுதிகளில் உள்ள வீதிகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகள் காற்றில் அங்கும், இங்குமாக பறந்து செல்கின்றன. பல நாட்கள் குப்பைகள் அந்த இடத்திலேயே கிடப்பதால், ஒருவித துர்நாற்றமும் வீசி சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இது காதர்பேட்டைக்கு வருகிற வியாபாரிகளிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் காதர்பேட்டையில் உள்ள வீதிகளில் குப்பை தொட்டி வசதி செய்து தர வேண்டும். குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×