என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
14 வயது சிறுமியை திருமணம் செய்ய கட்டாயம்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Byமாலை மலர்26 Dec 2020 2:50 PM GMT (Updated: 26 Dec 2020 2:50 PM GMT)
ஓமலூர் அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதாக போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் சடையன், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் பெரியசாமி (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெரியசாமி மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில், 14 வயது சிறுமியை திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய வாலிபர் பெரியசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X