என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கோவிலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்20 Dec 2020 12:21 PM GMT (Updated: 20 Dec 2020 12:21 PM GMT)
திருக்கோவிலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூரை அடுத்துள்ள கோலப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் கண்மணி(வயது 33). இவருக்கும் முகையூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் செல்வம் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஷ்ணு(11), சிவனேசன்(9) என்ற 2 மகன்கள் உள்ளனர். செல்வம் கடந்த 2018-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து கண்மணி திருக்கோவிலூர் அருகே உள்ள டி.கே.மண்டபம் கிராமத்தில் பெட்டி கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கண்மணி வீட்டில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ வெப்பம் தாங்க முடியாமல் அவர் கத்தினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி வந்து கண்மணியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர்அவரை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கண்மணி பரிதாபமாக இறந்தார்.
கண்மணியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை?. இது குறித்து திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X