search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கமுதி அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு: தந்தை-மகன் கைது

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாதை தகராறில் விவசாயியை, வெட்டிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
    கமுதி:

    கமுதி அருகே அபிராமம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காவல்கூட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் உமையவேல் (வயது49).இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த சங்கேஸ்வரன் (40) என்பவருக்கும், வீடு அருகே நடைபாதை பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அங்கு வந்த சங்கேஸ்வரனின் மகன் சூர்யா (20), விவசாயி உமையவேலை சராமரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த உமையவேல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

    இதுகுறித்து அபிராமம் போலீஸ் நிலையத்தில் உமையவேல் அளித்த புகாரின் பேரில், அபிராமம் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம் வழக்குபதிவு செய்து தந்தை சங்கேஸ்வரன் மற்றும் மகன் சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.
    Next Story
    ×