search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

    மார்த்தாண்டம் அருகே அதிகாலையில் காய்கறி விற்பனை செய்யும் பெண் வியாபாரியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே சிராயகுழியை சேர்ந்தவர் ராஜமணி மனைவி மரிய செல்வம் (வயது 73). இவர் அந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக அவர் தினமும் அதிகாலையில் மார்த்தாண்டம் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிச் செல்வது வழக்கம்.

    அதேபோல், நேற்று அதிகாலையிலும் மார்த்தாண்டம் காய்கறி சந்தையில் இருந்து காய்கறி வாங்கி வருவதற்காக மரியசெல்வம் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    இதற்காக மரியசெல்வம் வீட்டின் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தைக்கு செல்வதற்காக காத்திருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமி வந்தார். அவர், மரிய செல்வத்தின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு திடீரென அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த மரிய செல்வம் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அதற்குள் மர்ம ஆசாமி நகையை பறித்து விட்டு வேகமாக தப்பிச் சென்றார்.

    பின்னர், இதுகுறித்து மரிய செல்வம் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    அதிகாலையில் காய்கறி வியாபாரியிடம் மர்ம ஆசாமி சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×