search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    சேலத்தில் போலீஸ் தேர்வு எழுத சென்ற என்ஜினீயர் லாரி மோதி பலி

    சேலத்தில் போலீஸ் தேர்வு எழுத சென்ற என்ஜினீயர் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் ஓமலூர் அருகே தாராபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பெரியண்ணன் (வயது 21). என்ஜினீயர். 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த இவருக்கு, எழுத்து தேர்வுக்கு ராமலிங்கபுரத்தில் உள்ள கல்லூரியில் மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர் நேற்று காலை வீட்டில் இருந்து மொபட்டில் சேலம்-சென்னை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மாசிநாயக்கன்பட்டி அருகே சென்றபோது அவருக்கு பின்னால் வந்த லாரி, இவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×