என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்
Byமாலை மலர்13 Dec 2020 8:25 PM GMT (Updated: 13 Dec 2020 8:25 PM GMT)
ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்களிடையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்துக் கட்சிகளும் அதற்கான பணிகளை தொடங்கிவிட்டன. ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி என வெளிப்படையாக அறிவித்து தேர்தலுக்கு ஆயத்தமாகி உள்ளது.
தேர்தல் பணிகளை துரிதப்படுத்த அ.தி.மு.க. மாவட்டங்களைப் பிரித்து கூடுதலாக பொறுப்பாளர்களை அறிவித்தது. கடந்த மாதம் 20-ம் தேதி அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சட்டசபை தேர்தலுக்காக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பணிகள் தொடர்பான அறிக்கையுடன் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X