search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 40 பேர் பாதிப்பு

    சேலம் மாவட்டத்தில் நேற்று 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 709 ஆக உயர்ந்துள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 73 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 பேர், நங்கவள்ளியில் 6 பேர், மேட்டூரில் 5 பேர், ஆத்தூரில் 3 பேர், சேலம் ஒன்றியத்தில் 2 பேர், கொளத்தூர், மகுடஞ்சாவடி, ஓமலூர், தாரமங்கலம், வீரபாண்டி, காடையாம்பட்டி, வாழப்பாடி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

    அரியலூர், தர்மபுரியில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 709 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 53 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனிடையே சேலத்தை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் பலியானார்.
    Next Story
    ×