search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மகள் இறந்த துக்கம் தாங்க முடியாமல் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    திருக்காட்டுப்பள்ளி அருகே மகள் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து விவசாயி இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழைய ஆற்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது50). விவசாயி. இவரது மகள் கடந்த மாதம் இறந்தார். மகள் இறந்த மன உளைச்சலில் இருந்த இளங்கோவன் தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பூதலூர்அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இளங்கோவன் உயிரிழந்தார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகள் இறந்த துக்கத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×