என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
Byமாலை மலர்9 Dec 2020 9:21 AM GMT (Updated: 9 Dec 2020 9:21 AM GMT)
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், சோழ மண்டல சிவாஜி பேரவை தலைவர் சதா வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X