என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழா - ம.பி. முதல்வர் பங்கேற்பு
Byமாலை மலர்7 Dec 2020 1:08 AM GMT (Updated: 7 Dec 2020 1:08 AM GMT)
திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில் மத்திய பிரதேச முதல்-மந்திரி இன்று பங்கேற்கிறார்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்து மதம், தமிழ்க் கடவுள், தமிழர்களின் கலாசாரத்துக்கு எதிராக தொடுக்கப்படுகின்ற மோசமான பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தலைமையில் தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை எழுச்சியுடன் நடந்தது.
இந்நிலையில், வெற்றிவேல் யாத்திரையின் நிறைவு விழா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கு, எல்.முருகன் தலைமை தாங்குகிறார். மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
இந்த விழாவில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, தமிழக பா.ஜ.க. இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மாவட்ட, மண்டல நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X