என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி ஜீயபுரத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி
Byமாலை மலர்6 Dec 2020 1:42 PM GMT (Updated: 6 Dec 2020 1:42 PM GMT)
காதலன் ஏமாற்றிய விரக்தியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி:
திருச்சி ஜீயபுரம் அந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 22). இவர் திருப்பராய்த்துறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (25) என்பவரை காதலித்து வந்துள்ளார். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே திருமணம் ஆனவர். கவுசல்யாவிடம் தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு, நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார்,
கவுசல்யாயும் ராதாகிருஷ்ணனும் தென்னூர் காமராஜ் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கடந்த 3 மாதங்களாக சேர்ந்து வாழ்ந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கவுசல்யா கூறினார். அதற்கு ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார். கவுசல்யா தான் ஏமாற்றப்பட்டது அப்போது தான் தெரிய வந்தது.
இதில் மனம் உடைந்த கவுசல்யா விஷம் குடித்து உயிருக்கு போராடினார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X