search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேடசந்தூர் அருகே பெண்ணிடம் பணம் பறித்த 2 பேர் கைது

    வேடசந்தூர் அருகே பெண்ணிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேடசந்தூர்:

    வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். 

    விசாரணையில் அவர்கள், ஒட்டன்சத்திரம் கம்பிளியம்பட்டியை சேர்ந்த அஜித்குமார் (வயது 23), வேடசந்தூர் அய்யனார்நகரை சேர்ந்த கண்ணன் (23) என்பதும், வேடசந்தூர் பூத்தாம்பட்டி ரோட்டில், மாத்தினிபட்டியை சேர்ந்த ஸ்டாலின் தேவியிடம் ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்ததும் தெரிய வந்தது. 

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×