search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பெரம்பலூர் அருகே வாகனம் மோதி தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி

    பெரம்பலூர் அருகே வாகனம் மோதி தனியார் நிதி நிறுவன மேலாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் 2-வது அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 29). இவருக்கு சுதா என்ற மனைவியும், 2 வயதில் தமித்ஆருண் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். ராஜேந்திரன் திருச்சி சிந்தாமணியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து கொண்டு ராஜேந்திரன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அப்போது பெரம்பலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்பாடி பிரிவு சாலை அருகே வந்தபோது, அந்த வழியாக பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ராஜேந்திரனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு அழைத்து செல்லும் போது, வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×