search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குடும்ப தகராறு- வாலிபர் தற்கொலை

    திருப்பூரில் குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லூர்:

    திருப்பூர் முத்தணம்பாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவருடைய மனைவி பரிஷானா. சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் தகராறு எழுந்துள்ளது. இதனால் சுரேஷ் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு பரிஷானா அவரது அண்ணன் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. சத்தம் போட்டு பார்த்தும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சுரேஷ் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் காணப்பட்டார்.

    உடனடியாக அவரை இறக்கி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. இது குறித்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×