search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    டாஸ்மாக் கடையில் கூடுதல் நேரம் மது விற்ற 3 பேர் கைது

    டாஸ்மாக் கடையில் கூடுதல் நேரம் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யசோபன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஒழுகினசேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடையில், அரசு அனுமதி அளித்த நேரத்தைவிட கூடுதல் நேரம் மது விற்பனை நடைபெறுவதை கண்டனர். உடனே போலீசார், கூடுதல் நேரம் மது விற்ற கடையின் மேற்பார்வையாளர் கோட்டார் பகுதியை சேர்ந்த கணேஷ் (வயது 43) மற்றும் கடை ஊழியர்கள் சதீஷ்குமார், ஸ்ரீகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×