என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியை குத்திக்கொன்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்28 Nov 2020 2:01 PM GMT (Updated: 28 Nov 2020 2:01 PM GMT)
வாணியம்பாடி அருகே மனைவியை குத்திக்கொன்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த கணவர் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த நேதாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 49). இவருக்கும், மனைவிக்கும் கடந்த ஆண்டு ஏற்பட்ட குடும்பத் தகராறால் மனைவி ஷபானாவை கத்தியால் குத்தினார். அதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷபானா இறந்தார். கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து, பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
6 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அவர், அப்போதில் இருந்தே வீட்டில் மனைவியை நினைத்து மன வேதனையில் இருந்து வந்தார். நேதாஜிநகர்-லாலாஏரிக்கு செல்லும் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் பாபு தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து வந்து அவரின் பிணத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X