search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வலங்கைமான் அருகே மணல் கடத்தல் - வாலிபர் கைது

    வலங்கைமான் அருகே மணல் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மொபட்டை பறிமுதல் செய்தனர்.
    வலங்கைமான்:

    வலங்கைமான் பேரூராட்சி விருப்பாச்சிபுரம் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை மறித்து சோதனை மேற்கொண்டனர். பின்னர் மொபட்டில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மணவெளி தெரு பகுதியை சேர்ந்த சரவணன் (வயது35) என்பதும், மொபட்டில் மணல் கடத்தியதும் தெரியவந்தது. 

    இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மொபட்டை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×