என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் விடுதியில் தங்கியிருந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு- 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
Byமாலை மலர்28 Nov 2020 9:00 AM GMT (Updated: 28 Nov 2020 9:00 AM GMT)
நாகர்கோவிலில் விடுதியில் தங்கியிருந்த 2 பேரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் விடுதியில் தங்கியிருந்த 2 பேரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவர் அபிபுல்லா (வயது 43). இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.
அவரது அறையின் அருகில் உள்ள அறையில் கட்டிட தொழிலாளியான குலசேகரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் தங்கியிருந்தார். இந்தநிலையில் இவர்கள் 2 பேரின் அறைகளுக்கு பக்கத்தில் உள்ள மற்றொரு அறையில் நாகர்கோவில் மறக்குடித் தெருவைச் சேர்ந்த ஜெனித் (25) என்பவர் தங்கி உள்ளார். அவர் நேற்று முன்தினம் இரவு அபிபுல்லா, சுரேஷ் ஆகியோரிடம் சென்று செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜெனித்தும், அவருடன் இருந்த 3 பேரும் சேர்ந்து திடீரென அபிபுல்லா, சுரேஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடினர். விடுதியை விட்டு வெளியே வந்த அவர்கள், அந்த வழியாக வந்த நாகர்கோவில் சற்குணவீதி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (55) என்பவரை தாக்கி அவருடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதற்கிடையே அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த அபிபுல்லாவும், சுரேசும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X