search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 33 பேர் கைது

    பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, 3-வது நாளாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர் தலைமையில், அக்கட்சியினர் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 33 பேரை கைது செய்து வேனில் ஏற்றி, அருகேயுள்ள மண்டபத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்தனர்.
    Next Story
    ×