என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்23 Nov 2020 10:05 AM GMT (Updated: 23 Nov 2020 10:05 AM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
திருப்பூர்:
நாடு முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பாதிப்பு அதிகரித்து வந்தது. தற்போது முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த பாதிப்பு இருந்தது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மேலும் 72 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இதன் காரணமாக தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 835-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனா பலியும் தற்போது குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் நேற்று திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலியானார்.
அதன்படி திருப்பூரை சேர்ந்த 60 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 207-ஆக உயர்ந்துள்ளது. இதில் 47 பெண்கள் அடங்குவர்.
நாடு முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பாதிப்பு அதிகரித்து வந்தது. தற்போது முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த பாதிப்பு இருந்தது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மேலும் 72 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இதன் காரணமாக தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 835-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனா பலியும் தற்போது குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் நேற்று திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலியானார்.
அதன்படி திருப்பூரை சேர்ந்த 60 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 207-ஆக உயர்ந்துள்ளது. இதில் 47 பெண்கள் அடங்குவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X