என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்20 Nov 2020 9:49 AM GMT (Updated: 20 Nov 2020 9:49 AM GMT)
கும்மிடிப்பூண்டி அருகே மகளின் பிறந்தநாள் விழாவுக்கு ‘பேனர்’ வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே பாலவாக்கம் காலனியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கண்மணி (24).
நேற்று பாண்டியனின் ஒரு வயதான மகளுக்கு முதல் பிறந்தநாள் ஆகும். இதற்காக நேற்று முன்தினம் இரவு பாண்டியன், தனது வீட்டின் அருகே ‘பேனர்’ வைப்பதற்காக அந்த பகுதியில் தேங்கி கிடந்த முழங்கால் அளவு தண்ணீரில் நின்றவாறு தனது நண்பர் பசுபதி என்பவருடன் சேர்ந்து தைல மரங்களை வெட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் தைலமரம் முறிந்து விழுந்தது. தேங்கி நின்ற தண்ணீரில் நின்றபடி தைல மரக்கிளையை பிடித்தபடி நின்றிருந்த பாண்டியன் மற்றும் அவரது நண்பர் பசுபதி இருவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய பாண்டியனை சிகிச்சைக்காக பெரியபாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த அவரது நண்பர் பசுபதி, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே பாலவாக்கம் காலனியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கண்மணி (24).
நேற்று பாண்டியனின் ஒரு வயதான மகளுக்கு முதல் பிறந்தநாள் ஆகும். இதற்காக நேற்று முன்தினம் இரவு பாண்டியன், தனது வீட்டின் அருகே ‘பேனர்’ வைப்பதற்காக அந்த பகுதியில் தேங்கி கிடந்த முழங்கால் அளவு தண்ணீரில் நின்றவாறு தனது நண்பர் பசுபதி என்பவருடன் சேர்ந்து தைல மரங்களை வெட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் தைலமரம் முறிந்து விழுந்தது. தேங்கி நின்ற தண்ணீரில் நின்றபடி தைல மரக்கிளையை பிடித்தபடி நின்றிருந்த பாண்டியன் மற்றும் அவரது நண்பர் பசுபதி இருவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய பாண்டியனை சிகிச்சைக்காக பெரியபாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த அவரது நண்பர் பசுபதி, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X