என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Byமாலை மலர்20 Nov 2020 8:45 AM GMT (Updated: 20 Nov 2020 8:45 AM GMT)
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.21 ஆயிரத்து 710 பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அப்போது கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திருப்பூர் கோர்ட்டு வீதியிலுள்ள திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் துணை சூப்பிரண்டு தட்சிணா மூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. அலுவலகத்தில் இருந்து யாரையும் வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.
அதன்படி முதலில் ஒன்றிய மேலாளர் மற்றும் ஊழியர்கள் இருந்த அறையில் உள்ள ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் கணினியில் பதிவேற்றப்பட்ட ஆவணங்களையும் சரி பார்த்தனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 21 ஆயிரத்து 710 பறிமுதல் செய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர் கவுசல்யா தெரிவித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இரவு 10.30 மணிக்கு மேலும் தொடர்ந்து சோதனை நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அப்போது கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திருப்பூர் கோர்ட்டு வீதியிலுள்ள திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் துணை சூப்பிரண்டு தட்சிணா மூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. அலுவலகத்தில் இருந்து யாரையும் வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.
அதன்படி முதலில் ஒன்றிய மேலாளர் மற்றும் ஊழியர்கள் இருந்த அறையில் உள்ள ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் கணினியில் பதிவேற்றப்பட்ட ஆவணங்களையும் சரி பார்த்தனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 21 ஆயிரத்து 710 பறிமுதல் செய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர் கவுசல்யா தெரிவித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இரவு 10.30 மணிக்கு மேலும் தொடர்ந்து சோதனை நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X