search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    இருசக்கர வாகனங்கள் மோதியதில் கீழே விழுந்த பெண், லாரி மோதி பலி

    திருப்பரங்குன்றம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில் கீழே விழுந்த பெண் மீது லாரி மோதியதில் அவர் பரிதாபமாக பலியானார். கணவர் மற்றும் குழந்தைகள் கண் முன்னே இந்த சம்பவம் நடந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பரங்குன்றம்:

    திருமங்கலம்-உசிலம்பட்டி ரோட்டில் உள்ள அனுமார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கார்த்திகாதேவி (வயது 23). இவர்களுக்கு வெண்ணிலா என்ற 2 வயது பெண் குழந்தையும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது.

    ராஜ்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் விருதுநகரைச் சேர்ந்த சுருளிராஜன் என்பவர் விருதுநகரில் இருந்து மதுரை அழகர்கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

    திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடு பகுதியில் வந்தபோது திடீரென்று நிலைதடுமாறி 2 இரு சக்கர வாகனங்களும் மோதிக் கொண்டன. இதில் 2 பெண் குழந்தைகள் உள்பட 5 பேருமே கீழே விழுந்தனர்.

    இந்த சமயத்தில் கப்பலூரில் இருந்து வந்த டேங்கர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் கார்த்திகா தேவி மீது மோதியது. இதில் அவர் கணவர் மற்றும் குழந்தைகள் கண் முன்னே பரிதாபமாக இறந்து போனார். மீதி 4 பேரும் காயம் அடைந்தனர்.

    ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×