என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே சாலை தடுப்புகளால் விபத்துகள் ஏற்படும் நிலை
Byமாலை மலர்18 Nov 2020 7:34 AM GMT (Updated: 18 Nov 2020 7:34 AM GMT)
திருமங்கலம் அருகே வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சரியான முறையில் மாற்றி அமைத்திட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே ஆலம்பட்டி விலக்கு பகுதியில் இருந்து சேடபட்டி இணைப்பு சாலை செல்கிறது. ராஜபாளையம், குற்றாலம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், மதுரையில் இருந்து வரும் வாகனங்களும் ஆலம்பட்டி விலக்கு இணைப்புச் சாலையை கடந்து செல்கிறது.
சேடபட்டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், ராஜபாளையம் மதுரை மெயின் ரோட்டுடன் இணைகிறது. இதனால் வாகனங்கள் 3 சந்திப்பிலும் சந்திக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே விபத்துகளை தடுப்பதற்காக இரும்பினால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வேகத்தடை சரியான முறையில் வைக்கப்படாத நிலையில் வாகனங்கள் முன்னுக்குப்பின் முரணாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த வாரங்களில் மட்டும் 7-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த வேகத்தடையை சரியான முறையில் அமைத்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒளிரும் மின் விளக்குகளையும் அங்கு அமைத்திட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருமங்கலம் அருகே ஆலம்பட்டி விலக்கு பகுதியில் இருந்து சேடபட்டி இணைப்பு சாலை செல்கிறது. ராஜபாளையம், குற்றாலம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், மதுரையில் இருந்து வரும் வாகனங்களும் ஆலம்பட்டி விலக்கு இணைப்புச் சாலையை கடந்து செல்கிறது.
சேடபட்டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், ராஜபாளையம் மதுரை மெயின் ரோட்டுடன் இணைகிறது. இதனால் வாகனங்கள் 3 சந்திப்பிலும் சந்திக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே விபத்துகளை தடுப்பதற்காக இரும்பினால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வேகத்தடை சரியான முறையில் வைக்கப்படாத நிலையில் வாகனங்கள் முன்னுக்குப்பின் முரணாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த வாரங்களில் மட்டும் 7-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த வேகத்தடையை சரியான முறையில் அமைத்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒளிரும் மின் விளக்குகளையும் அங்கு அமைத்திட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X