search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தேனி அருகே தொழிலாளி தற்கொலை

    தேனி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 50). இவருடைய மனைவி லட்சுமி (38). இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்தனர். கடந்த 16-ந்தேதி இரவு சந்திரன், பட்டிவீரன்பட்டியில் உள்ள தனது பூர்வீக சொத்தை விற்பனை செய்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறி சென்றார். பின்னர் அவர் சொத்தை விற்க முடியாத விரக்தியில் தேனிக்கு திரும்பி வந்தார். இந்தநிலையில் அவர் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் அருகில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×