search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு குறைந்தது

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 25 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் நெல்லை மாநகராட்சி, பாளையங்கோட்டை யூனியன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,620 ஆக உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தென்காசி, கடையநல்லூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள். இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,939-ஆக உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. பல மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு நேற்று ஒற்றை இலக்கத்துக்குள் வந்தது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,474-ஆக உள்ளது. இதில் 15,108 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 135 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.
    Next Story
    ×