என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு குறைந்தது
Byமாலை மலர்17 Nov 2020 3:26 AM GMT (Updated: 17 Nov 2020 3:26 AM GMT)
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 25 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் நெல்லை மாநகராட்சி, பாளையங்கோட்டை யூனியன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,620 ஆக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தென்காசி, கடையநல்லூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள். இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,939-ஆக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. பல மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு நேற்று ஒற்றை இலக்கத்துக்குள் வந்தது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,474-ஆக உள்ளது. இதில் 15,108 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 135 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் நெல்லை மாநகராட்சி, பாளையங்கோட்டை யூனியன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,620 ஆக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தென்காசி, கடையநல்லூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள். இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,939-ஆக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. பல மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு நேற்று ஒற்றை இலக்கத்துக்குள் வந்தது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,474-ஆக உள்ளது. இதில் 15,108 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 135 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X