என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுவாமிமலை அருகே மின்சாரம் தாக்கி அஞ்சல் ஊழியர் பலி
Byமாலை மலர்16 Nov 2020 2:00 PM GMT (Updated: 16 Nov 2020 2:00 PM GMT)
சுவாமிமலை அருகே மின்சாரம் தாக்கி அஞ்சல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மைத்துனர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது48). அஞ்சலக ஊழியரான இவர் நேற்றுமுன்தினம் தனது வீட்டின் மொட்டை மாடியில் காய வைக்கப்பட்டிருந்த வைக்கோலை எடுக்க சென்றார். அப்போது தாழ்வாக இருந்த மின்கம்பி மீது அவர் கை உரசியது. இதில் ராஜேந்திரன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாடிக்கு சென்ற ராஜேந்திரன் வெகுநேரமாகியும் திரும்ப வராததால் அவரது அக்கா கணவர் லோகநாதன்(56), அவரது தம்பி சந்திரமோகன்(45) அக்கா மகன் பிரபாகரன்(25) ஆகியோர் மாடிக்கு சென்றனர்.
அங்கு ராஜேந்திரன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த 3 பேரும் அவரை தூக்க முயன்றனர். அப்போது அவர்கள் 3 பேரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ராஜேந்திரனுக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
இது குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபாவளியன்று மின்சாரம் தாக்கி அஞ்சல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X