search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நன்னிலம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

    நன்னிலம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நன்னிலம்:

    பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமீயச்சூர் தண்டதோப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருமீயச்சூர் தண்டதோப்பு பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(வயது35) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. 

    இதையடுத்து போலீசார், வெங்கடேசனை கைது செய்து அவரிடம் இருந்த 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் கடுவங்குடி மாணந்தெருவை சேர்ந்த கணபதி(55) சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கணபதியை கைது செய்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×