search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மாணவியை கடத்தி திருமணம்- போக்சோவில் வாலிபர் கைது

    அய்யலூர் அருகே ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    வடமதுரை:

    அய்யலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் பெற்றோருடன் இருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவி திடீரென்று மாயமானார். இதையடுத்து அவரை, பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்ற தகவல் கிடைக்கவில்லை. இதனால் தனது மகள் மாயமானது குறித்து அவர்கள், வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தேடி வந்தனர். இதற்கிடையே அந்த மாணவியை, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள குதிரைகுளத்துப்பட்டியை சேர்ந்த விக்கி (வயது 21) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு கோவையில் வசித்து வந்தனர். 

    இந்தநிலையில் நேற்று முன்தினம் தங்கம்மாபட்டி பஸ் நிறுத்தம் அருகே விக்கி நிற்பதாக வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், விக்கியை கைது செய்தனர். மேலும் பள்ளி மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து விக்கி மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×