search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருத்துறைப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

    திருத்துறைப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி மீனாட்சி வாய்க்கால் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். 

    அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்க்கால் மில்தெருவை சேர்ந்த பூபேஷ்குப்தா மகன் நந்தகுமார்(வயது21) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×