என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டை சேர்ந்த சிறுமியை கடத்தி திருமணம் செய்த சிறுவன் கைது
Byமாலை மலர்1 Nov 2020 1:50 PM GMT (Updated: 1 Nov 2020 1:50 PM GMT)
ஈரோட்டை சேர்ந்த சிறுமியை கடத்தி திருமணம் செய்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
பெருந்துறையை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலில் நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது தங்கையான 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி மற்றும் சிறுவனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் தளிகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன், சிறுமியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்பட்ட சிறுமி மற்றும் சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டு இதே சிறுமியை ஈரோடு மாவட்டம் சித்தோடு, பச்சப்பாளியை சேர்ந்த ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்ததாக பவானி மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக சிறுமியின் சகோதரர் அளித்த புகாரில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X