என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவ சீட் வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி
Byமாலை மலர்31 Oct 2020 2:41 AM GMT (Updated: 31 Oct 2020 2:41 AM GMT)
மருத்துவ சீட் வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 45). இவருடைய மகளுக்கு மருத்துவ சீட் வாங்குவதற்காக விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உமாமகேஷ்வரன் (50) என்பவரிடம் ரூ.45 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பணத்தை வாங்கிய உமாமகேஷ்வரன், மருத்துவ சீட் வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ரேவதி, மருத்துவ சீட்டுக்கு கொடுத்த ரூ.45 லட்சத்தை திருப்பி தரும்படி உமாமகேஷ்வரனிடம் கேட்டார். ஆனாலும் பணத்தை கொடுக்காமல் இருந்து வந்தார்.
இதுகுறித்து ரேவதி அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாமகேஷ்வரனை தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று விருகம்பாக்கம் பகுதியில் உமாமகேஸ்வரன் இருப்பதாக வந்த தகவலையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிராவின்டேனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உமாமகேஸ்வரனை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர், ரேவதியிடம் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் வாங்கி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். உமாமகேஷ்வரனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 45). இவருடைய மகளுக்கு மருத்துவ சீட் வாங்குவதற்காக விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உமாமகேஷ்வரன் (50) என்பவரிடம் ரூ.45 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பணத்தை வாங்கிய உமாமகேஷ்வரன், மருத்துவ சீட் வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ரேவதி, மருத்துவ சீட்டுக்கு கொடுத்த ரூ.45 லட்சத்தை திருப்பி தரும்படி உமாமகேஷ்வரனிடம் கேட்டார். ஆனாலும் பணத்தை கொடுக்காமல் இருந்து வந்தார்.
இதுகுறித்து ரேவதி அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாமகேஷ்வரனை தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று விருகம்பாக்கம் பகுதியில் உமாமகேஸ்வரன் இருப்பதாக வந்த தகவலையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிராவின்டேனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உமாமகேஸ்வரனை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர், ரேவதியிடம் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் வாங்கி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். உமாமகேஷ்வரனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X