என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீனவர் வீட்டில் ரூ.1½ லட்சம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Byமாலை மலர்30 Oct 2020 9:51 AM GMT (Updated: 30 Oct 2020 9:51 AM GMT)
மரக்காணம் அருகே மீனவர் வீட்டில் ரூ.1½ லட்சம் திருட்டுபோன சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 30). மீனவரான இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.
பின்னர் மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் ரொக்கம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
செல்வத்தின் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து செல்வம், மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 30). மீனவரான இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.
பின்னர் மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் ரொக்கம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
செல்வத்தின் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து செல்வம், மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X