என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆயுத பூஜையையொட்டி மல்லிகை பூ விலை உயர்வு
Byமாலை மலர்24 Oct 2020 7:06 AM GMT (Updated: 24 Oct 2020 7:06 AM GMT)
ஆயுதபூஜையையொட்டி பூக்கள் விலை எகிறியது. அந்தவகையில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1000-த்தை தாண்டியது.
கரூர்:
கரூர் ரெயில்வே ஜங்ஷன் ரோடு பகுதியில் கரூர் பூ மார்க்கெட் வளாகம் உள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர், எழுதியாம்பட்டி, தளவாபாளையம், செட்டிபாளையம், செக்கணம், காட்டூர், பிச்சம்பட்டி, திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் நேரடியாக இந்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்று செல்கின்றனர்.
மேலும் திண்டுக்கல் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்தும் கூட பூக்கள் கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலும் மல்லிகை, முல்லை, அரளி, ஜாதிப்பூ உள்ளிட்ட பூக்கள் ஏலத்திற்கு வருகிறது. இதனை மொத்த வியாபாரிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை அனைவரும் வந்து ஏலம் எடுத்து செல்கின்றனர்.
வழக்கம்போல நேற்றும் பூக்கள் ஏலம் விடப்பட்டது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆயுத பூஜை என்பதால், பூக்களின் தேவை பிரதானமாக இருக்கும். ஆகவே, பூக்களை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. அந்தவகையில், ஒரு கிலோ எடை கொண்ட மல்லிகை பூ ரூ.1,000-க்கும், முல்லை ரூ.800-க்கும், அரளி பூ ரூ.400-க்கும், ஜாதிப்பூ ரூ.500-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் ஏலம் போனதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர். அந்த பூக்களை சரமாக கட்டி விற்கும்போது அதன் விலை இன்னும் அதிகரிக்கும்.
ஆயுதபூஜைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் பூக்களின் விலை எகிறியதால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கரூர் ரெயில்வே ஜங்ஷன் ரோடு பகுதியில் கரூர் பூ மார்க்கெட் வளாகம் உள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர், எழுதியாம்பட்டி, தளவாபாளையம், செட்டிபாளையம், செக்கணம், காட்டூர், பிச்சம்பட்டி, திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் நேரடியாக இந்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்று செல்கின்றனர்.
மேலும் திண்டுக்கல் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்தும் கூட பூக்கள் கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலும் மல்லிகை, முல்லை, அரளி, ஜாதிப்பூ உள்ளிட்ட பூக்கள் ஏலத்திற்கு வருகிறது. இதனை மொத்த வியாபாரிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை அனைவரும் வந்து ஏலம் எடுத்து செல்கின்றனர்.
வழக்கம்போல நேற்றும் பூக்கள் ஏலம் விடப்பட்டது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆயுத பூஜை என்பதால், பூக்களின் தேவை பிரதானமாக இருக்கும். ஆகவே, பூக்களை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. அந்தவகையில், ஒரு கிலோ எடை கொண்ட மல்லிகை பூ ரூ.1,000-க்கும், முல்லை ரூ.800-க்கும், அரளி பூ ரூ.400-க்கும், ஜாதிப்பூ ரூ.500-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் ஏலம் போனதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர். அந்த பூக்களை சரமாக கட்டி விற்கும்போது அதன் விலை இன்னும் அதிகரிக்கும்.
ஆயுதபூஜைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் பூக்களின் விலை எகிறியதால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X