search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி
    X
    முதல்வர் பழனிசாமி

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம்- முதல்வர் உத்தரவு

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்படும். வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிக்சிசை அளிப்பதை உறுதி செய்ய அமைச்சர், கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். 

    பட்டாசு ஆலை தயாரிப்புகளில் மாவட்ட கலெக்டர்கள் அவ்வப்போது ஆய்வு செய்யவும் பட்டாசு தயாரிப்பு ஆலைகள் உரிய பாதுகாப்புடனும், கவனமாகவும் பணியில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார். 
    Next Story
    ×