என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புகை பிடிப்பதை கண்டித்ததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்21 Oct 2020 10:13 AM GMT (Updated: 21 Oct 2020 10:13 AM GMT)
கொடைக்கானலில் புகை பிடிப்பதை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் உள்ள ஆனந்தகிரி 4-வது தெருவை சேர்ந்தவர் அமுதா (வயது 40). கோர்ட்டு ஊழியர். இவரது கணவர் கருணாகரன். இவர்களது மகன்கள் கிருபிரபாகரன் (15), பிரின்ஸ் பிரபாகரன் (14). தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிரின்ஸ்பிரபாகரன் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கருணாகரன் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இதனால் அமுதா அதே பகுதியை சேர்ந்த இயேசுராஜன் என்பவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார்.
பிரின்ஸ் பிரபாகரனுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. எனவே அவனை இயேசுராஜன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X