என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை திருட்டு
Byமாலை மலர்20 Oct 2020 8:59 AM GMT (Updated: 20 Oct 2020 8:59 AM GMT)
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் அழகப்பபுரத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 65). இவர் நெல்லை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது அழகப்பபுரத்தில் தனது மகன், மருமகள், 5 வயது பேரனுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சுவாமிதாஸ், தனது பேரனுடன் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பேரனின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் மேஜையில் இருந்த செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றான்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பேரனின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி மற்றும் செல்போன் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் அழகப்பபுரத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 65). இவர் நெல்லை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது அழகப்பபுரத்தில் தனது மகன், மருமகள், 5 வயது பேரனுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சுவாமிதாஸ், தனது பேரனுடன் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பேரனின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் மேஜையில் இருந்த செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றான்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பேரனின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி மற்றும் செல்போன் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X