search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    தர்மபுரி அருகே விபத்தில் லாரி டிரைவர் பலி

    தர்மபுரி அருகே விபத்தில் லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நேற்று ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தர்மபுரி அருகே உள்ள சவுலூர் பகுதியில் சாலையின் மைய தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தென்காசியை சேர்ந்த மாற்று டிரைவர் சுப்புராஜ் (வயது38) இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த லாரியை ஓட்டி சென்ற டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×