search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திண்டுக்கல் அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

    திண்டுக்கல் அருகே கஞ்சா பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் தெற்கு போலீசார் என்.எஸ்.கே.நகர் பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த, 1½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை பதுக்கியதாக அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×