என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆறுமுகநேரி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்18 Oct 2020 12:09 PM GMT (Updated: 18 Oct 2020 12:09 PM GMT)
ஆறுமுகநேரி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் கஞ்சா விற்பதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் காயல்பட்டினத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது காயல்பட்டினம் மெயின் பஜாரில் உள்ள சீதக்காதி திடல் அருகே சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 10 கிராம் கொண்ட கஞ்சா பொட்டலங்கள் 15 இருந்தது. அதை அவர் அங்குள்ளவர்களுக்கு விற்பதற்காக வைத்திருந்தார் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் காயல்பட்டினம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் சதாம் உசேன் (வயது 30) என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X