search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    கன்னங்குறிச்சியில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கன்னங்குறிச்சி:

    கன்னங்குறிச்சி எல்.பி.செட்டி ரோடு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஹாஜகான் (வயது 49), ரிக் வண்டி தொழிலாளி. இவருக்கு கடன் தொல்லைகள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக வேலை எதுவும் இல்லாததால், வருமானமின்றி தவித்து வந்தார். 

    இந்தநிலையில் நேற்று வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×